மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு
.
மயில் தோகை போலே விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
.
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
.
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே
.
விடியாத காலைகள் முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள்
.
மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்
.
மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ
.
தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய்
.
இதழ் எனும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய்
.
பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம்
.
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு
.
மயில் தோகை போலே விறல் உன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
.
விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே
.
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே
.
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு