Natta Nadu Kadal meethu naan padum _ Sembaruthi movie song Lyric

0
4366

Song Details:
Song: Natta Nadu Kadal
Singer: Nagore E. M. Hanifa
Movie: Chembaruthi
Directed by: R K Selvamani
Music by: Ilayaraja

கடலிலே தனிமையில் போனாலும்
கண்மணி உன் நினைவில் களைப்பாருவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்

நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே

பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டு விலகாது உயிர் காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டு மரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை

வந்தவர்கள் போவார்கள் போகாது காதல்
வங்கக்கடல் மீதாணை தேயாது காதல்
சுத்தி வரும் புயலென்ன
கொட்டுகின்ற இடியென்ன
அன்பு விளக்கென்றும் எரியும்
தெய்வத்திற்கு திரையென்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்
ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்கு தூது விடக் கூடலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப் பறவையை நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே

விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்
கட்டு மரம் கடலாடி கரையேறும் நேரம்
உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்புக் குடமே
கட்டும் உண்டு காவலும் உண்டு
நம்மை என்ன செய்யும் இன்று
நித்திலமே முத்துரதமே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here